மருத்துவ படிப்புகளில் 50 % இடஒதுக்கீடு - ஜூலை 9 ஆம் தேதிக்கு விசாரணை தள்ளிவைப்பு
மருத்துவ மேற் படிப்புகளில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு கோரிய வழக்குகளின் விசாரணையை ஜூலை 9 தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது
முதுநிலை மருத்துவ படிப்புகளில், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 சதவீத ஒதுக்கீடு கோரி திமுக, அதிமுக, மதிமுக, திராவிடர் கழகம் உள்ளிட்ட கட்சிகளும், தமிழக அரசு சார்பிலும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு, நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு விசாரணைக்கு வந்தது.
மத்திய அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராஜகோபால், 27 சதவீத இடஒதுக்கீடு கோரிய வழக்கு உச்ச நீதிமன்றத்தில் ஜூலை 8 ம் தேதி விசாரணைக்கு வர உள்ளதால், இந்த வழக்குகளை தள்ளிவைக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதையடுத்து, வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஜூலை 9 ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
Next Story