மார்பிங் படத்தை உருவாக்கி பணம் கேட்டு மிரட்டல் - டிக் டாக் தம்பதியரை கைது செய்த போலீசார்

நாமக்கல் அருகே மனைவியின் படத்தை மார்பிங் செய்து அதை கணவருக்கு அனுப்பி பணம் கேட்டு மிரட்டிய டிக் டாக் காதல் தம்பதியரை போலிசார் கைது செய்தனர்.
மார்பிங் படத்தை உருவாக்கி பணம் கேட்டு மிரட்டல் - டிக் டாக் தம்பதியரை கைது செய்த போலீசார்
x
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் துணிக்கடை நடத்தி வருபவர் பரணிதரன். இவருடைய கடையில் ஷர்மிளா என்ற பெண் வேலை பார்த்து வந்தார். டிக் டாக்கில் வீடியோக்களை பதிவிடும் இவர், அதைக் கொண்டு கிடைத்த தொடர்பில் தூத்துக்குடியை சேர்ந்த சுரேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவரும் துணிக்கடை உரிமையாளரான பரணிதரன் மற்றும் அவரது மனைவியிடம் அடிக்கடி போனில் பேசி வந்துள்ளனர். இதனிடையே பரணிதரனின் மனைவியின் புகைப்படத்தை மார்பிங் முறையில் ஆபாசமாக மாற்றி அதை பரணிதரனுக்கு அனுப்பியுள்ளனர். படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிடாமல் இருக்க 40 லட்ச ரூபாய் பணம் தர வேண்டும் என்றும் அவர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். இதுதொடர்பாக பரணிதரண் அளித்த புகாரின் பேரில் சுரேஷ் மற்றும் அவரது மனைவி ஷர்மிளா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களின் செல்போனில் ஏராளமானோரின் மார்பிங் படங்கள் இருந்த நிலையில் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. 


Next Story

மேலும் செய்திகள்