300 நாட்களாக சுமார் 100 அடியாக நீடிக்கும் மேட்டூர் அணை நீர்மட்டம்
மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 300 நாட்களாக 100 அடிக்கு மேல் நீடித்து வருகிறது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 300 நாட்களாக 100 அடிக்கு மேல் நீடித்து வருகிறது.கடந்தாண்டு பருவ மழை கால தாமதமாக தொடங்கியதன் காரணமாக ஆகஸ்ட் 13 -ம் தேதி மேட்டுர் அணையின் நீர் மட்டம் 100 அடியை எட்டியது. அணையின் முழு கொள்ளளவான 120 அடியை கடந்தாண்டு 4 முறை எட்டியது.மேலும் அணையின் நீர்மட்டம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 13 முதல் இன்று வரை 300 -வது நாளாக 100 அடிக்கு மேல் நீடித்து வருகிறது. தற்போது ,அணையில் நீர் இருப்பு திருப்திகரமாக இருப்பதால் வரும் 12 -ம் தேதி குருவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story