கொரோனா இன்னும் தீவிரமாகும் - அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில், கொரோனாவின் தாக்கம், வரும் அக்டோபரில் உச்சத்தில் இருக்கும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
கொரோனா இன்னும் தீவிரமாகும் - அதிர்ச்சி தகவல்
x
கொரோனா பரவல் தொடர்பாக, தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சுதா சேஷய்யன், நோய் பரவல் துறைத்தலைவர் டாக்டர் ஸ்ரீனிவாஸ் ஆகியோர் அடங்கிய குழு அரசுக்கு அறிக்கை ஒன்றை அளித்துள்ளது. 

அதில், தற்போதுள்ள சூழ்நிலை நீடித்தால் இம்மாத இறுதியில் சுமார் ஒரு லட்சத்து 32 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் நோயினால் பாதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகளவில் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த மாதம்15 ஆம் தேதியில் ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு இருக்கும் என்றும், உயிரிழப்பு எண்ணிக்கை ஆயிரத்து ஐநூறை தாண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


அக்டோபர் மாதத்தில் நோய்த் தொற்றானது உச்சத்தில் இருக்கும் என்றும், டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே, நோய்த் தொற்று அதிகளவில் பரவி வரும் இந்த நேரத்தில், மக்கள் அனைவரும் பாதுகாப்பாக வீடுகளில் இருப்பதே சிறந்தது என மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்