தாராவியில் இருந்து கொண்டுவரப்பட்ட சடலம் மின்மயானத்தில் தகனம்

மும்பை தாராவியில் மாரடைப்பால் உயிரிழந்த 59 வயதான நபரின் சடலத்தை முறையான அனுமதியுடன் ஆம்புலன்ஸில் ஏற்றிக் கொண்டு மற்றொரு காரில் அவரது மகன் உள்பட 5 பேர், அனுமதியுடன் தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்துக்குச் சென்றனர்.
தாராவியில் இருந்து கொண்டுவரப்பட்ட சடலம் மின்மயானத்தில் தகனம்
x
மும்பை தாராவியில் மாரடைப்பால் உயிரிழந்த 59  வயதான நபரின் சடலத்தை முறையான அனுமதியுடன் ஆம்புலன்ஸில் ஏற்றிக் கொண்டு மற்றொரு காரில் அவரது மகன் உள்பட 5 பேர், அனுமதியுடன் தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்துக்குச் சென்றனர்.  கோவில்பட்டி தோட்டிலோவன்பட்டி சோதனைச் சாவடியில் அவர்களை நிறுத்தி விசாரித்தபோது, இறுதிச் சடங்கை நடத்த செல்வதாகக் கூறியுள்ளனர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர், 5 பேரையும் தனிமைப்படுத்தியதோடு, சடலத்தை கோவில்பட்டி மின் மயானத்தில் தகனம் செய்தனர். 


Next Story

மேலும் செய்திகள்