நீட் இட ஒதுக்கீடு விவகாரம்: "பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு மத்திய அரசு அநீதி" - ஸ்டாலின்
நீட் இடஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான இடங்களை மத்திய அரசு தடுத்துள்ளது என திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
நீட் இடஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான இடங்களை மத்திய அரசு தடுத்துள்ளது என திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், கடந்த 3 ஆண்டுகளில் 11 ஆயிரம் இடங்களை பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் இழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அரசியல்சட்டத்தின் உண்மையான நோக்கத்தின் அடிப்படையில் இடஒதுக்கீட்டு கொள்கையை பாதுகாக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
Next Story