தமிழகத்தில் அடுத்த 2 நாட்களில் தென்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில், தென் தமிழகம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களில் தென்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
x
வெப்பச்சலனம் காரணமாக தென் மாவட்டங்களிலும்,  கிருஷ்ணகிரி தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.  மதுரை, திருச்சி கரூர் தருமபுரி சேலம் வேலூர் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் முதல் 42 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் என கூறியுள்ளது. அடுத்துவரும் இரண்டு தினங்களுக்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் காலை 11.30 மணி முதல் மதியம் 3.30 மணி வரை வெளியில் பயணிப்பதை தவிர்க்கவும் கேட்டுக் கொண்டுள்ளது.   வட மேற்கு வங்க கடல் பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக் கூடும் என்பதால் அடுத்துவரும் 2 தினங்களுக்கு மீனவர்கள் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்

Next Story

மேலும் செய்திகள்