கொரோனா - ஆரஞ்சு மண்டலமாக மாறிய நாமக்கல்
கொரோனா பாதிப்பில், சிவப்பு மண்டலத்தில் இருந்த நாமக்கல் மாவட்டம் தற்போது ஆரஞ்சு மண்டலமாக மாறி உள்ளது.
கொரோனா பாதிப்பில், சிவப்பு மண்டலத்தில் இருந்த நாமக்கல் மாவட்டம் தற்போது ஆரஞ்சு மண்டலமாக மாறி உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் 77 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், அனைவரும் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தொடர்ந்து 14 நாட்கள் புதியதாக நோய் தொற்று கண்டறியப்படாததால், தற்போது ஆரஞ்சு மண்டலத்திற்கு நாமக்கல் மாறி உள்ளது. இந்த தகவலை நாமக்கல் சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் வெளியிட்டார்.
Next Story