கொரோனாவுக்கு 10 ஆயிரம் நிதி அளித்த யாசகர்
மதுரையில் யாசகம் பெற்ற 10 ஆயிரம் ரூபாயை கொரோனா நிதிக்கு யாசகர் ஒருவர் வழங்கியுள்ளார்.
மதுரையில் யாசகம் பெற்ற 10 ஆயிரம் ரூபாயை கொரோனா நிதிக்கு யாசகர் ஒருவர் வழங்கியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த பூல்பாண்டியன், ஒவ்வொரு இடமாக சென்று யாசகம் பெற்று, அந்த பணத்தை பொது சேவைக்கு கொடுத்து வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக மதுரையில் இருந்த அவர், அங்கே பல பகுதிகளில் யாசகம் பெற்றதன் மூலம் கிடைத்த பத்தாயிரம் ரூபாயை கொரோனா நிதியாக மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்.
Next Story