ஊரடங்கு தளர்வு எதிரொலி - சென்னை சாலைகளில் 40% வாகன போக்குவரத்து

ஊரடங்கு தளர்த்தப்பட்ட ஐந்தாவது நாளான இன்று, சென்னையில் 40 சதவீதம் வாகன போக்குவரத்து காணப்பட்டது
ஊரடங்கு தளர்வு எதிரொலி - சென்னை சாலைகளில் 40% வாகன போக்குவரத்து
x
ஊரடங்கு கடந்த 4 ஆம் தேதி முதல் தளர்த்தப்பட்டு, தொழில் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் குறைந்தபட்ச ஊழியர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தனிக்கடைகளும் கடந்த நான்கு நாட்களாக  இயங்கி வருகின்றன. இருப்பினும், சென்னை மாநகரம் இன்னும் தனது இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. சென்னை நகரில் வாகன போக்குவரத்து  40 சதவீதமாக உள்ளது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மே 18 ஆம் தேதி முதல் பொது போக்குவரத்து தொடங்கப்படும் என்பதால், அதன் பிறகு, சென்னை நகர சாலைகள் இயல்பு நிலைக்கு திரும்பும் என தெரிகிறது.


Next Story

மேலும் செய்திகள்