மாலை 6 மணிக்கு மக்களுக்கு உரையாற்றுகிறார் முதலமைச்சர்
கொரோனா தடுப்பு தொடர்பான நடவடிக்கைகள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் இன்று ஆலோசனை நடத்தி உள்ளார்.
சென்னையில் கொரோனா எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இதுவரை ஆயிரத்து 724 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனை கட்டுபடுத்துவது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் சென்னை ரிப்பன் மாளிகையில் ஆலோசனை நடைபெற்றது. இதில் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் சண்முகம், கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ், டி.ஜி.பி. திரிபாதி, மாநகர ஆணையர் விஸ்வநாதன் உள்ளிட்ட உயரதிகாரிகளும் பங்கேற்றனர். சென்னையில் நோய் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், மாலை 6 மணிக்கு முதலமைச்சர் உரையாற்றுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
Next Story