சென்னையிலிருந்து ஆட்டோவில் நெல்லைக்கு பயணம் - ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் மருத்துவமனையில் அனுமதி

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் சென்னையிலிருந்து ஆட்டோவில் நெல்லைக்கு சென்ற ஒரே குடும்பத்தை சேர்தவர்களை பிடித்து போலீசார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
சென்னையிலிருந்து ஆட்டோவில் நெல்லைக்கு பயணம் - ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் மருத்துவமனையில் அனுமதி
x
நெல்லை மேலப்பாளையம் பகுதியை சேர்ந்த மாரிமுத்து என்பவர் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் சென்னையில் வசித்து வருகிறார். ஆட்டோ ஓட்டுனரான அவர் ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டதால் சொந்த ஊருக்கு செல்ல முடிவு செய்தார். மாமியார்,மைத்துனர் மற்றும் குடும்பத்தினருடன் கடந்த  30-ந்தேதி சென்னையில் இருந்து நெல்லைக்கு புறப்பட்டார். வழியில் உள்ள  காவல்துறை சோதனை சாவடிகளில் கை குழந்தையை காரணம் காட்டி ஆட்டோவில் பயணத்தைதொடர்ந்தனர். நெல்லை மாவட்ட எல்லை பகுதியான கங்கைகொண்டான் அருகே வந்தபோது போலீசார் ஆட்டோவை நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர்.  நெல்லை மாவட்டத்துக்குள் அனுமதிக்க முடியாது என்று கூறி சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். ஆனால் பரிசோதனை செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் செய்ததாக கூறப்படுகிறது.  
நீண்ட  நேரத்திற்கு பின் 2 குழந்தைகள் உள்ளிட்ட 6 பேரையும் தனிமைப்படுத்தியபோலீசார், நள்ளிரவில் பாளையங்கோட்டை அரசு மருத்துமனையில் அனுமதித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்