"மக்கள் நலன் காக்க களப்பணி ஆற்றுவோம்" - திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்

மக்கள் நலன் காக்கும் பணியில் தி.மு.க தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக, அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மக்கள் நலன் காக்க களப்பணி ஆற்றுவோம் - திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்
x
மக்கள் நலன் காக்கும் பணியில் தி.மு.க தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக, அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், உலகம் இதுவரை கண்டிராத ஒரு பேரிடரை நாம் எதிர்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். இதில் மக்களின் உயிர்தான் முதன்மையானது; அரசியல் பார்வை, கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, கொரோனா நோய்த் தொற்றிலிருந்து மக்களைக் காப்பதற்கான பணியில் அரசுகளுக்கு ஒத்துழைப்போம் என தெரிவித்துள்ளார். கொரோனா களப் பணிகளைத் தொடர்ந்து செய்து, மக்கள் நலனைக் காத்திடுவோம் என்று தொண்டர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.மேலும், மத்திய அரசிடமிருந்து தமிழகத்திற்குக் கிடைக்க வேண்டிய உதவிகளையும், உரிமைகளையும் திமுக தொடர்ந்து வலியுறுத்தும் என்றும், அந்த கடிதத்தில் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்