மே மாதத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்த தமிழக அரசு திட்டம்

மே மாதத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
x
மே மாதத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால், பள்ளி, கல்லூரிகளுக்கு ஏற்கனேவே அறிவிக்கப்பட்ட தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மட்டும் முழுவதுமாக முடிந்துள்ள நிலையில், 11ம் வகுப்புக்கு ஒரு தேர்வு மட்டும் நடத்தப்படவில்லை. அதேபோல், கடந்த மார்ச் 27ம் தேதி தொடங்க இருந்த 10ம் வகுப்பு தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் நீடித்து வருகிறது. இந்நிலையில் 10ம் வகுப்பு தேர்வை அடுத்தமாதம் நடத்த கல்வித்துறை திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், கொரோனா  பாதித்த பகுதிகளில் உள்ள தேர்வு மையங்களை மாற்றவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்