"வேலூரில் மளிகை கடைகள் வாரத்தில் 3 நாட்கள் மட்டும் செயல்படும்" - மாவட்ட நிர்வாகம்

வேலூரில் கொரானாவுக்கு ஒருவர் உயிரிழந்ததை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் புதிய நேரக் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
வேலூரில் மளிகை கடைகள் வாரத்தில் 3 நாட்கள் மட்டும் செயல்படும் -  மாவட்ட நிர்வாகம்
x
வேலூரில் கொரானாவுக்கு ஒருவர் உயிரிழந்ததை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் புதிய நேரக் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அதன்படி, மளிகைக்கடைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் அனைத்தும் திங்கள், வியாழன் மற்றும் ஞயிற்று கிழமைகளில் மட்டும் காலை 6 மணி முதல் 10 மணி வரை திறந்திருக்கும். அதேபோல், காய்கறி கடைகள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள் ஆகியவை தினமும் காலை 6 மணி முதல் 10 மணி வரையும் பால் விற்பனை காலை 6 மணி முதல் 8 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் 7 மணி வரையும்  செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்