ஊரடங்கு உத்தரவை பயன்படுத்தி காய்கறி மற்றும் இறைச்சி விலையேற்றம் - கட்டுப்படுத்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
ஊரடங்கு உத்தரவை பயன்படுத்தி, காய்கறி மற்றும் இறைச்சி விலையேற்றம் கட்டுப்பாடின்றித் தொடர்வதால், அதை அரசு கட்டுப்படுத்த வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில், நோய்த்தொற்றிலிருந்து காத்துக் கொள்வதுபோலவே, உணவுத் தட்டுப்பாடின்றி மக்களை காக்கவேண்டியதும் அவசியம் என கூறியுள்ளார். அனைத்துத் தரப்பு மக்களுக்கும் வருமானம் குறைந்துள்ள நிலையில், அத்தியாவசியப் பொருட்களின் விலை நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போவதாக தெரிவித்துள்ளார். காய்கறி மற்றும் இறைச்சி விலையும் கட்டுப்பாடின்றித் தொடர்வதால், மக்களின் அன்றாட உணவுத் தேவைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு வருவதாக கூறியுள்ளார். இந்த விலையேற்றம், இடைத்தரகர்கள் மற்றும் பதுக்கல்காரர்கள் கொள்ளை லாபம் பெற வழிவகுக்கும் என கூறியுள்ள ஸ்டாலின்,
card 5
இதை அரசு கட்டுப்படுத்தி, மக்களின் உயிரைக் காத்திடவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
Next Story