"15 சதவீத வாகனங்களே இயங்குகின்றன" - மோட்டார் வாகன போக்குவரத்து கூட்டமைப்பு குற்றச்சாட்டு
அத்தியாவசிய சரக்கு போக்குவரத்து முடங்கியுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து கூட்டமைப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
உணவு உள்ளிட்ட தேவைகளை நிறைவேற்றும் வாகன போக்குவரத்தில் 15 வாகனங்களே இயங்குவதாக தெரிவித்துள்ளனர். நேஷனல் பர்மிட் பெற்ற 12 லட்சம் சரக்கு வாகனங்களில், தற்போது 2 லட்சம் வாகனங்களே இயக்கப்படுகின்றன என்றும், அதனால் உணவுப்பொருள் விநியோகத்தில் தேக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். ஊடரங்கு காரணமாக ஓட்டுநர்கள், தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், அரசு உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர். அந்த அமைப்பில் சுமார் 1 கோடி சரக்கு வாகனங்கள், 55 லட்சம் ஆம்னி பேருந்துகள் இணைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story