ஆதரவற்றோர் உடல்களை நல்லடக்கம் செய்யும் நிகழ்வு - நடிகர் சக்தி பங்கேற்பு
கடவுளை நம்புபவர்கள் மனிதநேயத்துடன் செயல்பட்டால், ஆதரவற்றோர் என்ற நிலை யாருக்கும் வராது என நடிகர் சக்தி தெரிவித்துள்ளார்.
கடவுளை நம்புபவர்கள் மனிதநேயத்துடன் செயல்பட்டால், ஆதரவற்றோர் என்ற நிலை யாருக்கும் வராது என நடிகர் சக்தி தெரிவித்துள்ளார். திருவண்ணாமலையை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் மணிமாறன், கடந்த 12 ஆண்டுகளாக ஆதரவற்றோர் உடல்களை சொந்த செலவில் நல்லடக்கம் செய்து வருகிறார். இந்நிலையில், வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் கிடந்த 4 சடலங்களை, பாலாற்று சுடுகாட்டில் நல்லடக்கம் செய்தார். இந்த நிகழ்வில் நடிகர் சக்தி கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சக்தி, உலகில் சந்தோஷமாக பிறக்கும் மனிதர்கள் ஆதரவற்றவர்களாக உலகை விட்டு செல்லும் போது நம்மால் முடிந்த உதவியை செய்ய வேண்டும் என்றார்.
Next Story