கொரோனா எதிரொலி : தேனீர் கடைகளில் குவளைகளை சோப் ஆயில் கொண்டு கழுவ உத்தரவு

கொரோனா வைரஸ் தாக்கம் எதிரொலியாக சென்னையில் உள்ள டீ- கடைகளுக்கு உணவு பாதுகாப்பு துறை கடும் கட்டுப்பாடு விதித்துள்ளது.
x
கொரோனா வைரஸ் தாக்கம் எதிரொலியாக சென்னையில் உள்ள டீ- கடைகளுக்கு உணவு பாதுகாப்பு துறை கடும் கட்டுப்பாடு விதித்துள்ளது. மக்கள் அதிகம் பயன்படுத்தும் தேனீர் கடைகளில், மாஸ்டர்கள், டம்ளர்களை சோப் ஆயில் கொண்டு சுத்தமாக கழுவ வேண்டும் என கூறியுள்ளது. முடிந்தவரை ஒருமுறை பயன்படுத்தப்படும் குவளைகளை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. டீக்கடையில் டீ போடும் மாஸ்டருக்கு காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தவும், அனைத்து உணவு கடை மற்றும் விடுதிகளில் பாத்திரங்கள், தண்ணீர் குடிக்கும் குவளைகளை கிருமி நாசினியால் கழுவுமாறும் உணவு பாதுகாப்புத் துறை வலியுறுத்தி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்