கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள் : நிர்வாகிகளுக்கு ரஜினி வேண்டுகோள்

மக்களிடம் அரசியல் குறித்த விழிப்புணர்வை தற்காலிகமாக நிறுத்திவிட்டு, கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ரஜினி மக்கள் மன்றத்தினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள் : நிர்வாகிகளுக்கு ரஜினி வேண்டுகோள்
x
ரஜினியின் அரசியல் அறிவிப்பு குறித்து மக்கள் மன்ற நிர்வாகிகள் பொதுமக்களை சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். வீடு வீடாக சென்று ரஜினியின் அரசியல் கருத்தைக் கூறி புரட்சிக்கு தயார் செய்து வருகின்றனர். இந்த நிலையில், தற்போது கொரோனா அதன் கொடூரத்தை காட்டி வருவதால், வரும் 31-ம் தேதி வரை மன்றப் பணிகளை நிறுத்தி வைத்து விட்டு, கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  


Next Story

மேலும் செய்திகள்