பட்டா கத்தியை காட்டி வியாபாரிக்கு மிரட்டல் - பணம் பறித்ததாக 3 பேர் கும்பல் கைது

சென்னை அடுத்த கேளம்பாக்கத்தில் பட்டா கத்தியை காட்டி வியாபாரியிடம் பணம் பறிக்க முயன்ற கும்பலை போலீசார் கைது செய்தனர்.
பட்டா கத்தியை காட்டி வியாபாரிக்கு மிரட்டல் - பணம் பறித்ததாக 3 பேர் கும்பல் கைது
x
வண்டலூர் - கேளம்பாக்கம் சாலையில் கடை நடத்தி வரும் கோவில்பிள்ளை என்பவரிடம், மூன்று பேர் கொண்ட கும்பல் பட்டா கத்தியுடன் சென்று பணம் பறிக்க முயன்றுள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பிவந்த கோவில்பிள்ளை, இதுகுறித்து கேளம்பாக்கம் காவல்நிலையத்தில் தெரிவித்துள்ளார். இதையடுத்து விரைந்து சென்ற போலீசார் கோவளம் சாலையில் சுற்றித்திரிந்த 3 பேரை பிடித்துள்ளனர். விசாரணையில், செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பை சேர்ந்த ஜெயச்சந்திரன், அச்சிரப்பாக்கத்தை சேர்ந்த ராஜன் மற்றும் அஜய் என்பது தெரியவந்தது. மூன்று பேரும் சேர்ந்து வியாபாரி கோவில்பிள்ளையை மிரட்டி பணம் பறிக்க முயன்றதை ஒப்புக்கொண்டுள்ளனர். இதையடுத்து, அவர்களிடம் இருந்து பட்டா கத்தியை பறிமுதல் செய்த போலீசார்,  3 பேரையும் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்