டிடிவி தினகரன் மீது அன்னிய செலாவணி மோசடி வழக்கு: அமலாக்க பிரிவு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

அன்னிய செலாவணி மோசடி வழக்கில் விதிக்கப்பட்ட 31 கோடி ரூபாய் அபராதத்தை வசூலிக்க அமலாக்கப் பிரிவுக்கு உத்தரவிடக் கோரிய வழக்கில், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் அமலாக்கப் பிரிவு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டிடிவி தினகரன் மீது அன்னிய செலாவணி மோசடி வழக்கு: அமலாக்க பிரிவு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
x
அன்னிய செலாவணி மோசடி வழக்கில் விதிக்கப்பட்ட 31 கோடி ரூபாய் அபராதத்தை வசூலிக்க அமலாக்கப் பிரிவுக்கு உத்தரவிடக் கோரிய வழக்கில், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் அமலாக்கப் பிரிவு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சைதாப்பேட்டையைச் சேர்ந்த பார்த்திபன் என்பவர் தொடர்ந்த வழக்கில், அபராதம் செலுத்துமாறு 1998ஆம் ஆண்டு அமலாக்கப் பிரிவு உத்தரவிட்ட நிலையில், 20 ஆண்டுகளாக வசூலிக்காததால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறியிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அமர்வு, அமலா​க்க பிரிவும், டிடிவி தினகரனும் பதிலளிக்கும் உத்தரவை பிறப்பித்து வழக்கை தள்ளிவைத்தது.


Next Story

மேலும் செய்திகள்