மதுரையில் போலி டாக்டர் கழுத்தறுத்து கொலை...

மதுரையில் போலி டாக்டர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில் போலி டாக்டர் கழுத்தறுத்து கொலை...
x
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ஆலம்பட்டி கிராமத்தில் கிளினிக் நடத்தி வந்தவர் பால்ராஜ். இவர் தனது மனைவி உயிரிழந்துவிட்டதால் பிள்ளைகளுடன் வசித்து வந்தார். 25 ஆண்டுகளுக்கு முன் தனியார் மருத்துவமனையில் மருத்துவரின் உதவியாளராக வேலை பார்த்த பின் தனியாக  கிளினிக் நடத்தி வந்துள்ளார். போலி மருத்துவர் என்பதை அறிந்த போலீசார் இரண்டு முறை இவரை கைது செய்துள்ளனர். இந்த சூழலில் இன்று காலை வீட்டுக்கு வெளியே இருந்த கழிப்பறையில் பால்ராஜ் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் ரத்தக்காயங்களுடன் சடலமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார், சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்