மீண்டும் செயல்பாட்டிற்கு வந்த பரனூர் சுங்கச்சாவடி

செங்கல்பட்டு அருகே பரனூர் சுங்கச்சாவடி மீண்டும் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.
மீண்டும் செயல்பாட்டிற்கு வந்த பரனூர் சுங்கச்சாவடி
x
செங்கல்பட்டு அருகே பரனூர் சுங்கச்சாவடி மீண்டும் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. கடந்த ஜனவரி 26ஆம் தேதி நிகழ்ந்த மோதலுக்கு பின், சுங்கச் சாவடியானது இயக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், 35 நாட்களுக்கு பிறகு, இந்த சுங்கச்சாவடி மீண்டும் திறக்கப்பட்டு, வாகன ஓட்டிகளிடம் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. நள்ளிரவு முதல் செயல்பாட்டிற்கு வந்துள்ள நிலையில், அசம்பாவித சம்பவங்களை தடுக்க , பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்