ஈரானில் சிக்கிய இந்திய மீனவர்களை மீட்க விமானத்தை அனுப்புங்கள் - வைகோ கோரிக்கை

ஈரானில் சிக்கிய இந்திய மீனவர்களை மீட்க, விமானத்தை அனுப்புமாறு வெளியுறவுத்துறை அமைச்சருக்கு, வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
ஈரானில் சிக்கிய இந்திய மீனவர்களை மீட்க விமானத்தை அனுப்புங்கள் - வைகோ கோரிக்கை
x
ஈரானில் சிக்கிய இந்திய மீனவர்களை மீட்க, விமானத்தை அனுப்புமாறு வெளியுறவுத்துறை அமைச்சருக்கு, வைகோ கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பால், ஈரான் துறைமுகங்கள் அடைக்கப்பட்ட நிலையில், அங்கு 900 இந்திய மீனவர்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியது. இந்நிலையில், சீனாவில் உள்ள இந்தியர்களை விரைவாக மீட்டது போல, ஈரானில் உள்ள இந்தியர்களை மீட்க, உடனடியாக விமானம் அல்லது கப்பலை அனுப்ப வேண்டும் என வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனிடையே, இந்தியர்கள் நாடு திரும்ப தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காக, ஈரானில் உள்ள அதிகாரிகளுடன் பேசி வருவதாக, ஈரானுக்கான இந்திய தூதர் தாமு கட்டம் தனது ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்