சுற்றுலா பேருந்து, ஆம்னி பேருந்து மோதிய கோர விபத்து : 5 பேர் உயிரிழப்பு - 25 பேர் காயம்
சுற்றுலா வந்த நேபாள பேருந்து மீது பெங்களூரில் இருந்து கேரளா நோக்கி சென்ற ஆம்னி பேருந்து மோதியதில், நேபாளத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர்.
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகேயுள்ள சிக்கனம்பட்டி ஊராட்சி, நரிப்பள்ளம் என்ற இடத்தில் சேலம் - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இந்த விபத்து நடந்துள்ளது. நேபாள நாட்டு சுற்றுலா பேருந்து, கன்னியாகுமரியில் இருந்து ராஜஸ்தான் நோக்கி சென்று கொண்டிருந்த போது, நரிப்பள்ளம் காளியம்மன் கோவில் மண்டபத்தில் தங்குவதற்காக சாலையை கடக்க முயன்றது. அப்போது, பெங்களூரிலிருந்து கேரளா செல்வதற்காக வந்த ஆம்னி பேருந்து, மோதியது. இந்த விபத்தில், சம்பவ இடத்திலேயே மூன்று பேர் உயிரிழந்தனர். மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது இருவர் உயிரிழந்தனர். 25க்கும் மேற்பட்டோர் படு காயமடைந்தனர்.
Next Story