சிங்கப்பூரில் இருந்து வந்த இளைஞருக்கு காய்ச்சல் : தனி வார்டில் வைத்து, மருத்துவர்கள் கண்காணிப்பு

சிங்கப்பூரில் இருந்து திரும்பிய இளைஞருக்கு காய்ச்சல் ஏற்பட்டதை தொடர்ந்து அவர், தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
சிங்கப்பூரில் இருந்து வந்த இளைஞருக்கு காய்ச்சல் : தனி வார்டில் வைத்து, மருத்துவர்கள் கண்காணிப்பு
x
சிங்கப்பூரில் இருந்து திரும்பிய இளைஞருக்கு காய்ச்சல் ஏற்பட்டதை தொடர்ந்து அவர், தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மகேஷ் சந்திரன் என்ற அந்த இளைஞர், சில நாட்களுக்கு முன் மனைவியின் பிரசவத்திற்காக மன்னார்குடி வந்துள்ளார். திடீரென காய்ச்சல் ஏற்பட்டதை தொடர்ந்து, தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா? என தனி வார்டில் வைத்து மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். இதனிடையே, மகேஷ் சந்திரனுக்கு கொரோனா பாதிப்பு இருக்க வாய்ப்பில்லை என்று கல்லூரி முதல்வர் குமுதா தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்