சென்னையில் செயின் பறிப்பில் ஈடுபட்ட மராட்டிய கொள்ளையன் கைது

சென்னையில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்த மகாராஷ்டிர மாநில கொள்ளையன் அமோல் பாலாசாகிப் ஷிண்டே-வை தனிப்படை போலீசார் கைதுசெய்தனர்.
சென்னையில் செயின் பறிப்பில் ஈடுபட்ட மராட்டிய கொள்ளையன் கைது
x
சென்னையில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்த மகாராஷ்டிர மாநில கொள்ளையன் அமோல் பாலாசாகிப் ஷிண்டே-வை தனிப்படை போலீசார் கைதுசெய்தனர். சென்னையில் பல்வேறு இடங்களில் லாட்ஜ் எடுத்து தங்கி, செயின் பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையனை, சிசிடிவி பதிவுகளின் அடிப்படையில் போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், வெளியூரிலிருந்து சென்னை திரும்பிய அமோல் பாலாசாகிப் ஷிண்டே, அண்ணாநகரில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது போலீசாரிடம் பிடிபட்டான். விசாரணையில், அவன் மகாராஷ்டிரா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கைவரிசை காட்டியது தெரியவந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்