இலங்கையிலிருந்து படகு மூலம் தங்கம் கடத்தல் : 3.5 கிலோ த​ங்கம் பறிமுதல், 3 பேரிடம் விசாரணை

இலங்கையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு படகில் கடத்திவரப்பட்ட மூன்றரை கிலோ தங்கத்தை பறிமுதல் செய்த மரைன் போலீசார், இதுதொடர்பாக 3 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இலங்கையிலிருந்து படகு மூலம் தங்கம் கடத்தல் : 3.5 கிலோ த​ங்கம் பறிமுதல், 3 பேரிடம் விசாரணை
x
கடந்த சனிக்கிழமை தனுஷ்கோடி கடல் பகுதியில், அத்துமீறி நுழைந்த இலங்கையை சேர்ந்த 3 பேரை, ஹெலிகாப்டரில் ரோந்துசென்ற கடற்படையினர் பிடித்து, தமிழக கடலோர காவல் குழும போலீசாரிடம் ஒப்படைத்தனர். மரைன் மற்றும் கியூ பிரிவு போலீசாரின் கூட்டு விசாரணையில், படகில் தங்கத்தை கடத்தி வந்ததை ஒப்புக்கொண்ட அவர்கள், அதனை தங்கச்சிமடம் மீனவர்களிடம் கொடுக்க சென்றபோது, சிக்கியது தெரியவந்தது. இலங்கை மீனவர்களின் தகவலின் பேரில், அவர்களது படகில் மறைத்து வைத்திருந்த மூன்றரை கிலோ தங்கத்தை பறிமுதல் செய்த போலீசார், அதனை சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். மேலும், இதுதொடர்பாக தங்கச்சி மடத்தை சேர்ந்த மீனவர்கள் சிலரை பிடித்து விசாரித்து போலீசார், தலைமறைவாக உள்ள மேலும் சிலரை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்