நண்பனின் மனைவியை மிரட்டி உல்லாசம் - கத்தியால் குத்தி கொல்ல முயன்ற தம்பதி கைது

சென்னை ஆதம்பாக்கத்தில் நண்பரின் மனைவியை மிரட்டி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட நபர் கத்தியால் குத்தப்பட்டு உயிருக்கு போராடி வருகிறார்.
நண்பனின் மனைவியை மிரட்டி உல்லாசம் - கத்தியால் குத்தி கொல்ல முயன்ற தம்பதி கைது
x
சென்னை ஆதம்பாக்கத்தில் நண்பரின் மனைவியை மிரட்டி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட நபர் கத்தியால் குத்தப்பட்டு உயிருக்கு போராடி வருகிறார். அசாம் மாநிலத்தை சேர்ந்த அபுசாலி முஸ்தபா உசேன் என்பவரும், தஜ்மல் அகமது என்பவரும் வேளச்சேரியில் உள்ள உணவகம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளனர். இந்த நிலையில், முஸ்தபா உசேனின் மனைவியான ரூஸ்தானா, தன்னிடம் தஜ்மல் அத்துமீறுவதாக கணவரிடம் கூறியுள்ளார். இது தொடர்பாக தஜ்மலை  அழைத்து விசாரித்த போது ஏற்பட்ட மோதலில், அபுசாலியும், மனைவி ரூஸ்தானாவும், தஜ்மலை கத்தியால் குத்தியுள்ளனர். தகவலறிந்து வந்த போலீசார்,கணவன் மனைவியை கைது செய்தனர். 


Next Story

மேலும் செய்திகள்