ஊராட்சி தலைவர் கொலையில் அடுத்தடுத்து திருப்பம் - சகோதரி மகன் அரவிந்தனுக்காக திட்டம் தீட்டிய தலைமை காவலர் கைது

ஈரோடு அருகே ஊராட்சி தலைவர் கொலைக்கு மூளையாக இருந்த தலைமை காவலரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஊராட்சி தலைவர் கொலையில் அடுத்தடுத்து திருப்பம் - சகோதரி மகன் அரவிந்தனுக்காக திட்டம் தீட்டிய தலைமை காவலர் கைது
x
அந்தியூர் அடுத்த சங்கராபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சின்னத்தங்கம் என்கிற ராதாகிருஷ்ணன் கடந்த 3ஆம் தேதி வெட்டி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக கூலி படையை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். கூலிப் படையை ஏவிய அரவிந்தன் என்பவர் சரணடைந்த நிலையில், அவரை போலீசார் நீதிமன்றக் காவலில் எடுத்து விசாரித்தனர். இதில், கொலைக்கு மூளையாக செயல்பட்டது அரவிந்தனின் தாய்மாமனும், தலைமைக் காவலருமான பிரபாகரன் என்பது தெரியவந்தது. சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் பணியாற்றிய அவரை கைது செய்த போலீசார், கோவை மத்திய சிறையில் அடைத்தனர். 


Next Story

மேலும் செய்திகள்