4 ஆண்டுகளாக நீடிக்கும் நில பிரச்சினை : கணவன்-மனைவிக்கு அரிவாள் வெட்டு

ஆம்பூர் அருகே நில பிரச்சினையில், தம்பதியை கொல்ல முயன்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
4 ஆண்டுகளாக நீடிக்கும் நில பிரச்சினை : கணவன்-மனைவிக்கு அரிவாள் வெட்டு
x
கம்மகிருஷ்ணபள்ளி கிராமத்தில், இந்த கொலை முயற்சி நடந்துள்ளது. கணவனை இழந்து சித்ரா என்ற பெண்ணுக்கும், மைத்துனர் முருகேசனுக்கும் இடையே கடந்த நான்கு ஆண்டுகளாக நீடிக்கும் நில பிரச்சினை குறித்து வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த சித்ரா, மைத்துனர், அவரின் மனைவியை அரிவாளால் சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றார். இதில் முருகேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரின் மனைவி விஜயா பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், காட்டுப்பகுதியில் பதுங்கி இருந்த பெண் கொலையாளியை கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்