குரூப் 4 முறைகேடு விவகாரம் : வாய்சவடால் விட்ட திருவராஜ் எங்கே?

குரூப் 4 முறைகேடு விவகாரத்தில் முதல் ஆளாக சிக்கிய ஆடு மேய்ப்பாளர் திருவராஜ், சிபிசிஐடி பிடியில் சிக்காமல் தலைமறைவாக இருந்து வருகிறார்.
குரூப் 4 முறைகேடு விவகாரம் : வாய்சவடால் விட்ட திருவராஜ் எங்கே?
x
சிவகங்கை மாவட்டம் பெரியகண்ணனூரைச் சேர்ந்த 46 வயதான திருவராஜ், குரூப் 4 தேர்வில் 300க்கு 290 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் முதலிடத்தை பிடித்தார். 7 முறை தோல்வியை தழுவிய இவரின் மதிப்பெண்ணில் தான் பெரிய சர்ச்சை ஆரம்பமானது. இது குறித்து விசாரித்த டி.என்.பி.எஸ்.சி ஆணையம் மீண்டும் நடத்திய திறனறிவுத்தேர்வில், திருவராஜ் முறைகேடு செய்தது உறுதி செய்யப்பட்டது. அன்று முதல் இன்று வரை திருவராஜ், சிபிசிஐடி போலீஸ் பிடியில் சிக்காமல், தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். குரூப் 4 முறைகேடு விவகாரத்தில், ஒரு நிபராதி என்பதை நிரூபிப்பேன் என வாய்சவடால் விட்ட திருவராஜ், தற்போது எங்கு இருக்கிறார் என சிபிசிஐடி போலீஸ் தேடி அலைந்து வருகிறது. 


Next Story

மேலும் செய்திகள்