"ஜூன் 30க்குள் தயாரிப்பாளர் சங்க தேர்தல்" - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலை வருகிற ஜூன் 30ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜூன் 30க்குள் தயாரிப்பாளர் சங்க தேர்தல் - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
x
தயாரிப்பாளர் சங்க தேர்தலை நடத்தக் கோரி, ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனு நீதிபதி செந்தில்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர், நடிகர் விஷால், அரசு தரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதி,  ஜூன் 30ஆம் தேதிக்குள், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என உத்தரவிட்டார். அத்துடன், தேர்தலை  நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரையும் நீதிபதி நியமனம் செய்தார். இந்த உத்தரவை தொடர்ந்து, தனி அதிகாரி நியமனத்தை எதிர்த்து, தொடர்ந்த வழக்கை நடிகர் விஷால் தரப்பு வாபஸ் பெற்றது.   

Next Story

மேலும் செய்திகள்