2-வது நாளாக அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்: தலைமை அலுவலகம் முன்பு தொண்டர்கள் போராட்டம்

அதிமுக தலைமை அலுவலகம் முன்பு அக்கட்சி தொடண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
2-வது நாளாக அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்: தலைமை அலுவலகம் முன்பு தொண்டர்கள் போராட்டம்
x
சென்னை  ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று 2வது நாளாக மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.  கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்று வரும் இந்த கூட்டத்தில் திருவண்ணாமலை, நீலகிரி, சிவகங்கை உள்பட 14 மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள், அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றுள்ளனர். கட்சியின் வளர்ச்சி மற்றும் தேர்தல் பணிகள் குறித்து அவர்கள் ஆலோசித்து வருகின்றனர். கூட்டம் தொடங்கும் முன், திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறை சேர்ந்த அதிமுகவினர் தலைமை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உள்ளாட்சி தேர்தலில் திமுகவிற்கு ஆதரவாக செய்யாறு எம்.எல்.ஏ தூசி மோகன் செயல்பட்டதாக அவர்கள் குற்றம் சாட்டினர். அவர்களை அதிமுக பிரமுகர்கள் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். 


Next Story

மேலும் செய்திகள்