அதிவேக மின்சார ரயில் சோதனை ஓட்டம் : திருவாரூர் - கடலூர் இடையே இயக்கம்
திருவாரூரில் இருந்து கடலூர் வரையிலான அதிவேக மின்சார ரயில் சோதனை ஓட்டம், பாதுகாப்பு ஆணையர் மனோகரன் தலைமையில் நடைபெற்றது.
திருவாரூரில் இருந்து கடலூர் வரையிலான அதிவேக மின்சார ரயில் சோதனை ஓட்டம், பாதுகாப்பு ஆணையர் மனோகரன் தலைமையில் நடைபெற்றது. டீசல் பயன்பாட்டை குறைக்கும் வகையில், நாடு முழுவதும் மின்சார ரயிலை இயக்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக, திருவாரூரில் இருந்து கடலூர் வரை மின்மயமாக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ரயிலுக்கு மாலை அணிவித்து, சிறப்பு பூஜைகள் நடத்தி சோதனை ஓட்டம் நடைபெற்றது. இதனை, ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர்.
Next Story