பாதாள சாக்கடை திட்டத்துக்காக தோண்டப்பட்ட சாலை - சாலையை சீரமைத்த காவலர்கள்

ராஜபாளையத்தில் குண்டும் குழியுமாக இருந்த சாலையை போலீசாரே சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
பாதாள சாக்கடை திட்டத்துக்காக தோண்டப்பட்ட சாலை - சாலையை சீரமைத்த காவலர்கள்
x
ராஜபாளையத்தில் குண்டும் குழியுமாக இருந்த சாலையை, போலீசாரே சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆர்.ஆர். நகர் பகுதியில் பாதாள சாக்கடை மற்றும் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு தோண்டப்பட்ட  சாலைகள்,
சரியாக சீர் அமைக்காததால் மேடு பள்ளமாக உள்ளது. இது குறித்து அந்த பகுதி மக்கள்,  நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதை தொடர்ந்து  ராஜபாளையம் சிறப்பு காவல் படை 11-ஆம் அணியும், பொதுமக்களும் இணைந்து சாலையை சீரமைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்