உயர் நீதிமன்ற வளாகம் முழுவதும் சிஐஎஸ்எப் பாதுகாப்பை விரிவுபடுத்த கோரி வழக்கு : தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை உயர் நீதிமன்ற வளாகம் முழுவதும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் பாதுகாப்பை அமல்படுத்த கோரிய மனுவுக்கு, தமிழக அரசும், உயர் நீதிமன்ற பதிவாளரும் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உயர் நீதிமன்ற வளாகம் முழுவதும் சிஐஎஸ்எப் பாதுகாப்பை விரிவுபடுத்த கோரி வழக்கு : தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
x
சென்னை உயர் நீதிமன்ற வளாகம் முழுவதும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் பாதுகாப்பை அமல்படுத்த கோரிய மனுவுக்கு,  தமிழக அரசும், உயர் நீதிமன்ற பதிவாளரும் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கறிஞர் ஜார்ஜ் வில்லியம்ஸ் தாக்கல் செய்த மனுவில், சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள நீதிமன்றங்களில் சில நேரத்தில் கத்தி குத்து தாக்குதல், தகராறுகள்   நடந்து வருவதால், அதைதடுக்க மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் பாதுகாப்பை வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.  இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா  அடங்கிய அமர்வு, உயர் நீதிமன்ற பதிவாளர் மற்றும் தமிழக அரசு மார்ச் 4ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்