மது பாட்டிலை மறைத்து வைத்ததால் ஆத்திரம் - அக்காவை குத்திக் கொன்ற தம்பி கைது

மது பாட்டிலை மறைத்து வைத்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அக்காவை குத்திக் கொலை செய்த தம்பியை போலீசார் கைது செய்துள்ளனர்.
மது பாட்டிலை மறைத்து வைத்ததால் ஆத்திரம் - அக்காவை குத்திக் கொன்ற தம்பி கைது
x
சென்னை வளசரவாக்கம், வேலன் நகரில் வசித்து வருகிறார், இலங்கையைச் சேர்ந்த  தாரகேஸ்வரி. இவரது தம்பி குகதாசன், சபரிமலைக்கு மாலை அணிந்திருந்த காரணத்தால், இலங்கையில்  இருந்து வந்து, வளசரவாக்கத்தில் உள்ள அக்கா வீட்டில் தங்கியுள்ளார். குடிபோதைக்கு அடிமையான அவர், கடந்த 15 ஆம் தேதி சபரிமலை தரிசனம் முடித்துவிட்டு வந்த நிலையிலும் தொடர்ச்சியாக குடித்து வந்துள்ளார். இந்த நிலையில், வீட்டில் வாங்கி வைத்திருந்த மதுபாட்டிலை, தாரகேஸ்வரி மறைத்து வைத்துள்ளார். இதனால்  வாக்குவாதம் செய்த குகதாசன், ஆத்திரத்தின் உச்சியில் தனது அக்கா என்றும் பாராமல் சரமாரியாக குத்திக் கொலை செய்துள்ளார். இதைத், தடுக்க முயன்ற தாரகேஸ்வரியின் மகன் ஆதிசன், பாட்டி வேதநாயகி ஆகியோரையும் குகதாசன் கத்தியால் குத்தியுள்ளார். இது குறித்து  தகவல் அறிந்த போலீசார், போதையில் இருந்த குகதாசனை கைது செய்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்