போக்குவரத்தை சீர் செய்ய 17 வயது சிறுவனுக்கு உத்தரவு - சிறார் நீதிமன்றம் தீர்ப்பு
திருச்சி கே.கே.நகரில், சாலை விபத்து தொடர்பான வழக்கு ஒன்றில், இளைஞருக்கு, போக்குவரத்தை சீர் செய்ய உத்தரவிட்டு, சிறார் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
திருச்சி கே.கே.நகரில், சாலை விபத்து தொடர்பான வழக்கு ஒன்றில், இளைஞருக்கு, போக்குவரத்தை சீர் செய்ய உத்தரவிட்டு, சிறார் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. பாலமுருகன் என்பவர் கடந்தாண்டு, குடிபோதையில் 5 நண்பர்களுடன் ஒரே வாகனத்தில், வேகமாக சென்று விபத்தில் சிக்கினார். அப்போது அவருக்கு 17 வயது என்பதால், வழக்கு சிறார் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்நிலையில் வழக்கில், சிறார் நீதிமன்ற நீதிபதி ஷகீலா பானு, 2 நாட்கள், போக்குவரத்து காவலர்களுடன் இணைந்து போக்குவரத்தை சீர் செய்ய வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்தார். இந்த உத்தரவுபடி, இன்று பாலமுருகன் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டார்.
Next Story