போக்குவரத்தை சீர் செய்ய 17 வயது சிறுவனுக்கு உத்தரவு - சிறார் நீதிமன்றம் தீர்ப்பு

திருச்சி கே.கே.நகரில், சாலை விபத்து தொடர்பான வழக்கு ஒன்றில், இளைஞருக்கு, போக்குவரத்தை சீர் செய்ய உத்தரவிட்டு, சிறார் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
போக்குவரத்தை சீர் செய்ய 17 வயது சிறுவனுக்கு உத்தரவு - சிறார் நீதிமன்றம் தீர்ப்பு
x
திருச்சி கே.கே.நகரில், சாலை விபத்து தொடர்பான வழக்கு ஒன்றில், இளைஞருக்கு, போக்குவரத்தை சீர் செய்ய உத்தரவிட்டு, சிறார் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. பாலமுருகன் என்பவர் கடந்தாண்டு, குடிபோதையில் 5 நண்பர்களுடன் ஒரே வாகனத்தில், வேகமாக சென்று விபத்தில் சிக்கினார். அப்போது அவருக்கு 17 வயது என்பதால், வழக்கு சிறார் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்நிலையில் வழக்கில், சிறார் நீதிமன்ற நீதிபதி ஷகீலா பானு, 2 நாட்கள், போக்குவரத்து காவலர்களுடன் இணைந்து போக்குவரத்தை சீர் செய்ய வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்தார். இந்த உத்தரவுபடி, இன்று பாலமுருகன் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டார்.   

Next Story

மேலும் செய்திகள்