8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை : "குற்றவாளிகளை சுட்டுக் கொல்ல வேண்டும்"- உறவினர்கள் ஆவேசம்

சிவகாசி அருகே 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் உண்மை குற்றவாளிகளை சுட்டுக் கொல்ல வேண்டும் என உறவினர்கள் தங்கள் குமுறலை வெளிப்படுத்தி உள்ளனர்.
8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை : குற்றவாளிகளை சுட்டுக் கொல்ல வேண்டும்- உறவினர்கள் ஆவேசம்
x
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே கொங்களாபுரத்தில் 8 வயது சிறுமி, பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக, சந்தேகத்தின் பேரில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் உள்பட சிலரை போலீசார் கைது செய்துள்ள நிலையில், உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் சாலை மறியல் உள்பட, பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், உண்மையான குற்றவாளிகளை கைது செய்து அவர்களை சுட்டுக் கொல்ல வேண்டும் என்றும், இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் தடுக்க கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் சிறுமியின் பெற்றோர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்