சிறுமி வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவம் : குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய கோரி மறியல்

சிவகாசி அருகே 3 ஆம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்தவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி நடந்த சாலை மறியலில் 500க்கும் மேற்பட்டோர் திரண்டனர்
சிறுமி வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவம் : குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய கோரி மறியல்
x
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள கொங்களாபுரம் கிராமத்தில் மூன்றாம் வகுப்பு பள்ளி மாணவி கடந்த 20ஆம் தேதி இரவு மர்ம நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டார். இந்த படுகொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள சிவகாசி நகர் காவல்துறையினர்  5 தனிப்படை அமைத்து விசாரித்து வருகின்றனர்.  இந்தநிலையில் சம்பவம் நடந்து 2 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய வில்லை என குற்றம்சாட்டி, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 500 பேர் திரண்டு 3 மணி நேரமாக நடந்த இந்த பிரமாண்ட சாலை மறியலால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

"24 மணி நேரத்துக்குள் குற்றவாளிகளை கைது செய்வோம்" : அதிகாரிகள் உறுதியை ஏற்று மறியலை கைவிட்ட மக்கள்

இதை தொடர்ந்து அங்கு வந்த  வருவாய் துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினர். 24 மணி நேரத்தில் உண்மையான குற்றாவளிகள் கைது செய்யப்படுவார்கள் என அவர்கள் அளித்த உறுதியின் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.  தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டுள்ளதாக தெரிவித்த மக்கள், குற்றவாளிகள் கைது செய்ய தாமதம் ஏற்பட்டால், அடுத்த‌கட்டமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில்  ஈடுபடுவோம் என எச்சரித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்