சிறப்பு எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கு - நாளை 3 மணிக்கு உத்தரவு என நீதிமன்றம் அறிவிப்பு

சிறப்பு எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சமீம், தவுஃபீக் இருவரையும் போலீஸ் காவலில் எடுக்க காவல்துறை அனுமதி கோரியுள்ளது.
சிறப்பு எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கு - நாளை 3 மணிக்கு உத்தரவு என நீதிமன்றம் அறிவிப்பு
x
இந்த வழக்கில், தவுபீக், சமீம் ஆகிய இருவரும் இன்று நாகர்கோவிலில் மாவட்ட அமர்வு நீதிபதி அருள் முருகன்  முன் ஆஜர்படுத்தப்பட்டனர்.   அவர்களை தொடர்ந்து விசாரிப்பதற்காக 28 நாட்கள் போலீஸ் காவல் அளிக்குமாறு காவல்துறை தரப்பு வேண்டுகோள் விடுத்தது. இறுதியில் இருவரையும்  போலீஸ் காவலில் அனுப்புவது குறித்து நாளை மதியம் 3 மணிக்கு உத்தரவு  பிறப்பிக்கப்படும் என நீதிபதி அறிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்