மாவோயிஸ்ட் மணிவாசகத்தின் மனைவி மகன் மீது வழக்கு - தீவட்டிப்பட்டி போலீசார் நடவடிக்கை

கேரளாவில் சுட்டுக்கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் மணிவாசகத்தின் மனைவி மற்றும் மகன் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மாவோயிஸ்ட் மணிவாசகத்தின் மனைவி மகன் மீது வழக்கு - தீவட்டிப்பட்டி போலீசார் நடவடிக்கை
x
சேலம் மாவட்டம் ஒமலூர் அருகே உள்ள கனவாய்புதூர் ஊராட்சி ராமமூர்த்தி நகரைச் சேர்ந்த மாவோயிஸ்ட் மணிவாசகம், கேரளாவில் கடந்த நவம்பர் மாதம் சுட்டுக்கொல்லப்பட்டார். இதை தொடர்ந்து நீதிமன்றத்தின் ஆணை பெற்று, சொந்த ஊரான, ராமமூர்த்தி நகரில் உடல் அடக்கம் செய்யப்பட்டது. நவம்பர் 15-ம் தேதி நடைபெற்ற உடல் தகனத்தின் போது, அரசுக்கு எதிராக கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக, அவரது மனைவி லட்சுமி, மகன் சுதாகர், உள்ளிட்ட ஆறு பேர் மீது, தீவட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.   


Next Story

மேலும் செய்திகள்