சமத்துவ பொங்கல் கொண்டாட்டம் - சிலம்பம் சுற்றி அசத்திய தாவணி பெண்கள்

சென்னை ஆவடி அருகே விநாயகபுரத்தில் கொண்டாடப்பட்ட சமத்துவ பொங்கல் விழாவில் தாவணி அணிந்த பெண்கள் சிலம்பம் சுற்றி அசத்தியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
சமத்துவ பொங்கல் கொண்டாட்டம் - சிலம்பம் சுற்றி அசத்திய தாவணி பெண்கள்
x
சென்னை ஆவடி அருகே விநாயகபுரத்தில் கொண்டாடப்பட்ட சமத்துவ பொங்கல் விழாவில் தாவணி அணிந்த பெண்கள் சிலம்பம் சுற்றி அசத்தியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. 2 நாட்களாக கொண்டாடப்பட்டு வரும் இந்த விழாவில் மத வேறுபாடின்றி பெண்கள் புத்தாடை அணிந்து, புதுப்பானையில் பொங்கலிட்டு, பொங்கலோ பொங்கல் என மகிழ்ச்சியுடன் பொங்கல் திருவிழாவை கொண்டாடினர். பல்வேறு கிராமிய கலைகளிலும் பெண்கள் அசத்தினர். இதனை தொடர்ந்து சிறுவர்களின் மாறுவேட போட்டிகளும் நடைபெற்றன.


Next Story

மேலும் செய்திகள்