தொழிலாளிக்கு ரயில்வே பணி வழங்க கோரி ரயில்வே பொதுமேலாளரை சந்தித்து தயாநிதி மாறன் மனு

ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் தொழிலாளிக்கு ரயில்வே துறையில் வேலை வழங்க கோரி தி.மு.க. தயாநிதி மாறன் ரயில்வே பொது மேலாளரை சந்தித்து மனு அளித்தார்.
தொழிலாளிக்கு ரயில்வே பணி வழங்க கோரி ரயில்வே பொதுமேலாளரை சந்தித்து தயாநிதி மாறன் மனு
x
ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் தொழிலாளிக்கு, ரயில்வே துறையில் வேலை வழங்க கோரி தி.மு.க. தயாநிதி மாறன் ரயில்வே பொது மேலாளரை சந்தித்து மனு அளித்தார். வியாசர்பாடியை சேர்ந்த செல்வராஜ் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை பல ஆண்டுகளாக மீட்டு வருகிறார்.  அண்மையில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்திந்த செல்வராஜ் தனக்கு ரயில்வே துறையில் பணி கிடைக்க உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். இதன் அடிப்படையில் இன்று தயாநிதி மாறன், ரயில்வே பொது மேலாளரை சந்தித்து செல்வராஜிக்கு அரசு பணி வழங்க கோரி மனு கொடுத்தார்.



Next Story

மேலும் செய்திகள்