தவறுதலாக சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்ட விவகாரம் : விருதுநகர் மாவட்டத்தில் 6 வார்டுகளில் வாக்குப் பதிவு ரத்து
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வில்லிபத்திரி ஊராட்சியில் ஆறு கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு இன்று நடைபெற இருந்த வாக்குப் பதிவு ரத்து செய்யப்பட்டு உள்ளது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வில்லிபத்திரி ஊராட்சியில் ஆறு கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு இன்று நடைபெற இருந்த வாக்குப் பதிவு ரத்து செய்யப்பட்டு உள்ளது. 3 வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட நிலையில், எஞ்சியுள்ள 6 ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பதவிக்கு இன்று நடை பெற இருந்த தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. 13 வேட்பாளர்களுக்கு தவறுதலாக சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக தெரிவித்து, இந்த 6 வார்டுகளுக்கான தேர்தலை மட்டும் மாநில தேர்தல் ஆணையம் ரத்து செய்தாக மாவட்ட ஆட்சியர் கண்ணன் தெரிவித்துள்ளார்.
Next Story