வாக்காளர் பட்டியலில் குழப்பம் - மழையில் போராடிய வாக்காளர்கள்

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே பழையகோட்டை ஊராட்சியில் வாக்காளர் பட்டியலில் ஒரு ஊரில் உள்ளவர்கள் மற்றொரு ஊரின் கீழ் சேர்க்கப்பட்டதை கண்டித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வாக்காளர் பட்டியலில் குழப்பம் - மழையில் போராடிய வாக்காளர்கள்
x
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே  பழையகோட்டை ஊராட்சியில், வாக்காளர் பட்டியலில் ஒரு ஊரில் உள்ளவர்கள், மற்றொரு ஊரின் கீழ் சேர்க்கப்பட்டதை கண்டித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பழையகோட்டை ஊராட்சிக்குட்ட 2வது வார்டு உப்பாத்துப்பட்டியில் சுமார் 180 க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். இந்நிலையில் அவர்களின் பெயர்கள், வாக்காளர் பட்டியலில் பேச்சக்காம்பட்டி என்ற ஊரின் கீழ் இடம் பெற்றுள்ளது. இதனால் காலை மழையிலும் மக்கள் பேருந்துகளை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து மக்கள் போராட்டத்தை கைவிட்டனர். 


Next Story

மேலும் செய்திகள்