அதிமுக பிரமுகர் வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை
வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக வந்த புகாரை அடுத்து, ஓசூரில் அதிமுக பிரமுகர் வீட்டில் வருமான வரி மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
ஓசூர் அருகே, அந்தேவனபள்ளி கிராமத்தைச் சேர்ந்த சிவகாமி மாதேஷ், தளி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக அப்பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் பசவராஜ் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக, பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக பசவராஜ் வீட்டை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். தகவல் அறிந்து வந்த தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் பசவராஜ் வீட்டில் சோதனை நடத்தினர். சோதனையில் பணம் எதுவும் சிக்கவில்லை.
Next Story