"அங்கீகாரம் பெறாத பாட பிரிவில் மாணவர்களை சேர்க்க கூடாது" - அண்ணா பல்கலைகழகம் அறிவிப்பு

அங்கீகாரம் பெறாத பொறியியல் பாட பிரிவுகளில், அடுத்த ஆண்டு மாணவர்களை சேர்க்க கூடாது என்று அண்ணா பல்கலைகழகம் அறிவித்துள்ளது.
அங்கீகாரம் பெறாத பாட பிரிவில் மாணவர்களை சேர்க்க கூடாது - அண்ணா பல்கலைகழகம் அறிவிப்பு
x
பொறியியல் கல்லூரிகள், ஒவ்வொரு ஆண்டும், அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பு அங்கீகாரத்தை பெற வேண்டும் என்பது விதிமுறை. அதன்படி 2020 - 21 ஆம் ஆண்டுக்கான இணைப்பு அங்கீகாரம் பெற, ஜனவரி 10-ஆம் தேதிக்குள், இணையதளம் வழியாக தனியார் கல்லூரிகள் விண்ணப்பிக்க வேண்டும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. மேலும், பாட பிரிவுகள் வாரியாக, அங்கீகாரத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும் எனவும், அங்கீகாரம் பெறாத பாட பிரிவுகளில், அடுத்த ஆண்டு மாணவர் சேர்க்கை நடத்தக்கூடாது எனவும் கூறியுள்ளது. விண்ணப்பங்களை சமர்பிக்கும் கல்லூரிகள், பான் கார்டு,ஆதார் விவரங்களையும் சமர்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்